Tamilkudil Valaagam



நாங்கள் யார்??
எங்களைப் பற்றி சில வசனங்கள்...


சில தோட்டத்துப் பல மரங்களில் பழுத்த ஓரினக்கனிகள் ஒன்று சேர்ந்து ஓர் பழக்கூடை ஆனதுபோல்,
நாம் தாய்நிலம் விட்டு இடம் பெயர்ந்து இங்கு வந்து தமிழால் அன்புடன் ஒன்று சேர்ந்த
"ஒரு நண்பர்கள் குடும்பம்".

உறவுகள் பல இருந்தும், மனம் கனம் கொண்டு துவளும்போது தோள் கொடுப்பது நல்லதொரு தோழமை.
எம் இயந்திர வாழ்க்கையில் தனி இனச்சுமையும், வேலைப்பளுவும் ஒன்றிணைந்து
சில நேரங்களில் நம்மைத் தலை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அழுத்தும்போது உணர்வு கொண்டு தோழமையுடன் ஒன்று சேர்ந்தோம்.

நலிந்த மனங்கள் சுகம் அடையவும் , சுகம் கண்ட மனங்கள் ஆரோக்கியமாக நீண்ட காலங்கள் பயணிக்கவும் விளையாட்டுத்திடலில் ஒன்றுகூடி பல மகிழ்ச்சியான தருணங்களில் களித்திருந்தோம்.

தற்போது உள்ள இந்த இக்கட்டான சூழ்நிலை விரைவில் நம்மை விட்டு அகன்று. எதிர்வரும் மகிழ்விற்காக காத்திருக்கும் ...... ,